ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் சிறப்பு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்  செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் சிறப்பு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்  செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
   ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டியில் உள்ள கோட்டச் செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் ஆ. அசோக்குமார் தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில், பொதுமக்கள் தங்களது குறைகளை நேரில் தெரிவித்து பயன்பெறலாம் என,  பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்ட செயற் பொறியாளர் கோ.வா.பழனிவேல் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com