ராஜபாளையம் திருவள்ளுவர் நகர் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில், குறுவள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் மேரி சீத்தா தலைமையில் நடைபெற்ற இந்த அறிவியல் கண்காட்சியில், நிலையான வளர்ச்சியில் புதுமைகளின் பங்கு என்ற தலைப்பில் மாணவர்கள் பல்வேறு படைப்புகளை காட்சிப்படுத்தினர். சிறந்த படைப்புகளுக்கான பரிசுகள் தொடக்க, நடுநிலைப் பள்ளி அளவில் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, பள்ளித் தலைமையாசிரியை ஜெயலட்சுமி செய்திருந்தார்.