விருதுநகர் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, மத்திய ஆயுதப்படைக் காவலர் புதன்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
விருதுநகர் அருகே உள்ள சீனியாபுரத்தைச் சேர்ந்தவர் முத்துகுமாரசாமி (29). இவர், அருணாச்சல பிரதேச மாநிலத்தில் மத்திய ஆயுதப் படையில் போலீஸாக பணிபுரிந்து வந்தார்.
குடும்பப் பிரச்னை காரணமாக, இவரது மனைவி முனிச்செல்வி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில், ஒரு மாத விடுப்பில் சொந்த ஊருக்கு முத்துகுமாரசாமி வந்துள்ளார். மனைவியை பார்க்கச் சென்றபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாம்.
இதனால் மனமுடைந்த முத்துகுமாரசாமி, புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து ஆமத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.