சிவகாசியில் 2 பைக்குகள் மாயம்

சிவகாசியில் 2 இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டுவிட்டதாக, வெள்ளிக்கிழமை புகார் செய்யப்பட்டுள்ளது.

சிவகாசியில் 2 இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டுவிட்டதாக, வெள்ளிக்கிழமை புகார் செய்யப்பட்டுள்ளது.
     சிவகாசி அருகே மேலபிச்சுப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (25). இவர், தனது இரு சக்கர வாகனத்தை சிவகாசியில் உள்ள நகராட்சி தினசரி காய்கறி சந்தை முன்பு நிறுத்திவிட்டு, காய்கறி வாங்கிவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது காணவில்லையாம்.
     சிவகாசி அறிஞர் அண்ணா காலனியை சேர்ந்த அச்சுத் தொழிலாளி மாரிமுத்து (35), தனது இரு சக்கர வாகனத்தை பேருந்து நிலையப் பகுதியில் நிறுத்திவிட்டு, வெம்பக்கோட்டை சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது காணவில்லையாம்.
     இது குறித்து இருவரும் அளித்த புகாரின்பேரில், சிவகாசி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com