சிவகாசியில் வியாபாரக் கடைகளில் திங்கள்கிழமை இரவு வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
சிவகாசி ஞானகிரி சாலையில் வசிப்பவர் கே.பி. பாஸ்கரன். இவர், அம்மன்கோவில்பட்டியில் பல்பொருள் அங்காடி வைத்துள்ளார். வடக்கு ரத வீதியில் சிமென்ட் கடையும் நடத்தி வருகிறார். மேலும், ஆணையூரில் பட்டாசுக் கடை, சித்துராஜபுரத்தில்ஆப்-செட் அச்சகம் உள்ளிட்ட தொழில்களும் நடத்தி வருகிறார். இவரது கடை உள்ளிட்ட 5 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரி ராஜலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில், சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.