விருதுநகர்
விருதுநகரில் சதுரங்கப் போட்டி
விருதுநகரில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
விருதுநகரில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற போட்டியில் மதுரை, விருதுநகர், திருச்சி, திருப்பூர், கரூர், தேனி, கன்னியாகுமரி, திருவெல்வேலி, கோவை முதலான மாவட்டங்களிலிருந்து 180 பேர் கலந்து கொண்டனர்.
பல்வேறு நிலைகளில் நடைபெற்ற இப்போட்டியில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட அனைத்து பிரிவினரும் கலந்து கொண்டனர். இரண்டு நாள்கள் நடைபெறும் இப்போட்டியில், முதல் நான்கு இடங்களைப் பெற்றவர்கள் தர்மபுரியில் நடைபெற உள்ள போட்டிக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளனர். போட்டிக்கான ஏற்பாடுகளை விருதுநகர் பாரத ஸ்டேட் வங்கி, விருதுநகர் சுழற்சங்கம், விருதுநகர் செஸ் கிளப் ஆகியவை செய்திருந்தன.