விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின் பகிர்மானக்கழக மேற்பார்வை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திட்டத் தலைவர் சவுந்திரபாண்டியன் தலைமை வகித்தார். இதில், பல ஆண்டுகளாக ஓப்பந்த அடிப்படையில் பணி புரியும் ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு, தினக்கூலியாக ரூ. 380 வழங்க வேண்டும். ஓப்பந்த ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மின் வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.