ராஜபாளையத்தில் பொன்னான பாரதம் என்ற தலைப்பில், பிரஜா பிரம்மா குமாரிகள் சார்பில் பேருந்து மூலம் விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
ராஜபாளையம் சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் முன்பாக நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், பிரம்மா குமாரி மீனாட்சி வரவேற்றுப் பேசினார். இதில், சிறப்பு அழைப்பாளராக தடயவியல் அறிவியல் அலுவலக இணை இயக்குநர் கிருஷ்ணகுமார் கலந்துகொண்டு, இயக்கத்தின் செயல்பாடு குறித்தும், பேரணியின் நோக்கம் குறித்தும் பொதுமக்களிடம் விளக்கினார்.
இதில், தூய்மை, ஆக்கப்பூர்வ சிந்தனை மற்றும் தியானம் உள்ளிட்டவைகளால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பிரம்மா குமாரிகள் இயக்க தலைமையக அலுவலர் ஜெயக்குமார் முன்னிலையில், அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பேருந்து பேரணியானது, குஜராத் மாநிலத்தில் தொடங்கி, கேரளம், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி வழியாக ராஜபாளையம் வந்தடைந்தது.
பின்னர், விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகள் வழியாக மதுரையை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டது.