பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயாவில்  குழந்தைகள் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.  

ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயாவில்  குழந்தைகள் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.  
விழாவுக்கு பள்ளியின் தாளாளர் ஜி.எஸ். முருகேசன் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியை எம்.ராணி முன்னிலை வகித்தார். விழாவினை முன்னிட்டு குழந்தைகளுக்கு தனித்திறன் போட்டி, பேச்சுப்போட்டி, நடனப்போட்டி, தனித்திறனறிதல் போட்டி, நாடகம், படம் வரைதல், கதை சொல்லல் மற்றும் மாறுவேடப் போட்டி என பல்வகையான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்குளம், சத்யா வித்யாலயா சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை குழந்தைகள் தின விழா தாளாளர் செ.குமரேசன் தலைமையில் நடைபெற்றது.நிர்வாக அறங்காவலர் டாக்டர் சித்ரா, முதன்மை நிர்வாக அதிகாரி அரவிந்த், ஆலோசகர் எஸ்.பாரதி முதல்வர் ப.முருகதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
விழாவையொட்டி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. துணை முதல்வர் சு.சத்தியமூர்த்தி, நிர்வாக அலுவலர் ப.அமுதா, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் பெற்றோர் - ஆசிரியர் கழகக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் கா.மாரீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com