ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் மின் நுகர்வோர் குறை தீர் சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (நவ.20) நடைபெறுகிறது.
பொதுமக்களின் நீண்டகால மின்சாரம் தொடர்பான பிரச்னைகளை தீர்ப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டியில் உள்ள கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை இக் கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் எஸ்.வெண்ணிலா கலந்துகொண்டு மின் நுகர்வோரின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வு காண உள்ளார்.
பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கோட்ட செயற்பொறியாளர் எம்.சுடலையாடும் பெருமாள் கேட்டுக் கொண்டுள்ளார்.