ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராசபுரத்தில் கடந்த சில மாதங்களாக கலையரங்கம் கட்டுவது சம்பந்தமாக இரு தரப்பினரிடையே தகராறு இருந்து வருகிறது.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது இரு தரப்பிரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பாக இரு தரப்பும் அளித்த புகாரின் பேரில் 35 பேர் மீது சேத்தூர் புறக்காவல் நிலைய போலீசார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.