விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உள்ள அமலா மேல்நிலைப் பள்ளியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் அருப்புக்கோட்டை தீயணைப்பு துறை மேலாளர் நாகராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர்.
இதற்கான ஏற்பாடுகளை காரியாபட்டி வருவாய்த்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில், அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய மேலாளர் நாகராஜ், காரியாபட்டி வட்டாட்சியர் ரவி, காரியபட்டி உதவி காவல் ஆய்வாளர் முத்துராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.