ராஜபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
ராஜபாளையம்-தென்காசி சாலையில் சனிக்கிழமை தனியார் நூற்பாலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டி ஒருவர் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்துள்ளார்.
அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தார். இது குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.