அருப்புக்கோட்டை புளியம்பட்டி பகுதி காந்தி திடலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அருப்புக்கோட்டை புளியம்பட்டி பகுதியில் நான்குமுனை சாலை சந்திப்பில் காந்தி திடல். இப்பகுதியிலுள்ள குடியிருப்பு வாசிகள் இந்த வழியாகத்தான் பிற பகுதிகளுக்குச் செல்ல முடியும். இந்நிலையில், காந்தி திடலை ஆக்கிரமித்து தள்ளுவண்டி, சிறுகடைகள் அமைத்துள்ளனர். மேலும், கட்டுமான கழிவுகளையும் இங்கு கொட்டி வைத்துள்ளனர். எனவே, காந்தி திடல் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.