விருதுநகரில் உலக பசுமையாக்கலை வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் அருகே பெரியவள்ளிக்குளத்தில் உள்ள நோபிள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப் போட்டியில், உலக பசுமையாக்கலை கருப்பொருளாக கொண்டு மாணவ, மாணவிகள் ஓவியம் தீட்ட அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், மரங்கள், மழைநீர் சேகரிப்பு, தடுப்பணை கட்டுதல் முதலான ஓவியங்களை ஏராளமான மாணவ, மாணவிகள் சுவர்களில் வரைந்தனர். இதில், பிளஸ் 2 மாணவி அபிநயா முதலிடத்தையும், 10 ஆம் வகுப்பு மாணவிகள் ஹர்ஷினி பிரியா, சுஜ்ஜேஷ்னி ஆகியோர் 2 ஆம் இடத்தையும், பிளஸ் 1 மாணவி அனிதா மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவி யாக்ஷினி 3 ஆம் இடத்தையும் பெற்றனர்.
இவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக இந்நிகழ்ச்சியை, இப்பள்ளியின் தலைவர் ஜெரால்டு ஞானரத்தினம், பள்ளியின் செயலர் வெர்ஜின் இனிகோ ஆகியோர் தொடக்கி வைத்தனர்.