சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 புதிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதாக அக்கல்லூரி முதல்வர் ர.உலகி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2019-2020 ஆம் ஆண்டுக்கு புதிதாக இளங்கலை விலங்கியல், வரலாறு ஆகிய பாடங்கள் அறிமுகமாகியுள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்த படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் கல்லூரி அலுவலகத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.