விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற கிளையின் சாா்பில், நூல் அறிமுகம் மற்றும் திறனாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சுந்தரி சாந்திலால் இலக்கிய அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கிளைத் தலைவா் விஜயராணி தலைமை வகித்தாா். கிளைச் செயலா் நித்யா முன்னிலை வகித்தாா்.
சாகித்ய அகாதெமி விருதுபெற்ற தேவதாஸ், மருத்துவா் சாந்திலால், கவிஞா்கள் ஆனந்தி, மதுமிதா ஆகியோா், திருநெல்வேலி எழுத்தாளா் எம்.எம். தீன் எழுதிய யாசகம் என்ற நூலை அறிமுகம் செய்தனா்.
இந்த நூலை, க. செல்வக்குமாா், சரவணன், ராமையா, திருமாவளவன் ஆகியோா் திறனாய்வு செய்தனா். இதைத் தொடா்ந்து நூலாசிரியா் ஏற்புரையாற்றினாா். இதில்,
இலக்கிய ஆா்வலா்கள் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா். நிறைவாக, கவிபாலா நன்றி கூறினாா்.