முதல்வர் கோப்பைக்கான மாநில கைப்பந்து போட்டி: சிவகாசி கல்லூரி அணி தகுதி

முதல்வர் கோப்பைக்கான மாநில கைப்பந்துப் போட்டிக்கு சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி அணி தகுதி பெற்றுள்ளது.


முதல்வர் கோப்பைக்கான மாநில கைப்பந்துப் போட்டிக்கு சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி அணி தகுதி பெற்றுள்ளது.
 முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான 21 வயதுக்கு உள்பட்ட மகளிர் பிரிவு கைப்பந்துப் போட்டிகள், விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் 10 கல்லூரி அணிகள் கலந்து கொண்டன.  இப்போட்டியில் சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி அணி வெற்றி பெற்று முதலிடம் பெற்றது. இதன்மூலம் முதல்வர் கோப்பைக்கான மாநில மகளிர் கைப்பந்துப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது. மாநில அளவிலான போட்டி திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.17) முதல் 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.
மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ள மாணவிகளை கல்லூரித் தலைவர் திலகவதி ரவீந்திரன், செயலாளர் அருணா அசோக், உடற்கல்வி இயக்குனர் சா.விஜயகுமாரி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர். கல்லூரி முதல்வர் த.பழனீஸ்வரி இத்தகவலை தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com