அருப்புக்கோட்டை துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை (ஜூன் 15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை அருப்புக்கோட்டை நகர், பாளையம்பட்டி, கல்குறிச்சி, ஆத்திப்பட்டி, பந்தல்குடி, பெரியபுளியம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என, அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியச் செயற்பொறியாளர் பி. முத்தரசு தெரிவித்துள்ளார்.