அருப்புக்கோட்டை சந்திரா நேசனல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தில்லியைச் சேர்ந்த இண்டர்நேசனல் ஒலிம்பியாட் பவுண்டேசன் நடத்திய பல்வேறு தனித்திறன் போட்டிகளில், வெற்றி பெற்று பரிசுகளை வென்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக இப்பள்ளிச் செயலர் பி.சி. பார்த்திபன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தில்லியைச் சேர்ந்த இண்டர்நேசனல் ஒலிம்பியாட் பவுண்டேசன் அமைப்பு பள்ளிகளிடையேயான பல்வேறு தனித்திறன் போட்டிகளை நடத்தி வருகிறது.
இப்போட்டிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் எங்கள் பள்ளியின் 1 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களில் ஆங்கில தனித்திறன் போட்டிகளில் 4 ஆம் வகுப்பு மாணவர் ம.ர.அனீஸ்குமார், 5 ஆம் வகுப்பு மாணவர் கு.அபிஜித் , 6 ஆம் வகுப்பு மாணவர் ச.விஸ்வா ஆகியோர் பரிசுகளை பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
அதே போல் அறிவியல் தனித்திறன் போட்டிகளில் 4 ஆம் வகுப்பு மாணவர் ச.ஹர்திக் நடேஷ், 5ஆம் வகுப்பு மாணவர் தி.சஸ்வந்த், 6 ஆம் வகுப்பு மாணவர்கள் ச.விஸ்வா, மாணவி அ.ச.ராகசந்தோஷி ஆகியோரும், கணித தனித்திறன் போட்டியில் 4 ஆம் வகுப்பு மாணவர் ஜெ.கீதப்பிரியன், 5 ஆம் வகுப்பு மாணவர் க.அபிஜித், 6 ஆம் வகுப்பு மாணவி அ.ச.ராகசந்தோஷி ஆகியோரும் பல்வேறு பரிசுகளை வென்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
இப்போட்டிகளில் வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவ, மாணவியரை பள்ளிச் செயலர் பி.சி.சரவணன், பள்ளித் தாளாளர் பி.சி.பார்த்திபன் மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.