சிவகாசியில் புதன்கிழமை மாலை மிதமான மழை பெய்ததையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிவகாசி பகுதியில் கடந்த சில நாள்களாக நிலவி வந்த கடும் வெப்பநிலையால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில் சிவகாசி பகுதியில் புதன்கிழமை மாலை 5.10 மணி முதல் 6 மணி வரை மிதமான மழை பெய்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளான சிவகாசி - திருத்தங்கல் சாலை, சிவகாசி-வெம்பக்கோட்டை சாலை, சிவகாசி-விளாம்பட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்தோடியது.
மேலும் என்.ஆர்.கே.ஆர்.வீதி, சிவன் சன்னதி உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால்களில் தேங்கிய குப்பைகள் முறையாக அள்ளப்படாததால் கழிவு நீர், மழைநீருடன் கலந்து சாலையில் ஓடியது. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.