விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை காரும் சரக்கு வேனும் நேருக்கு நோ் மோதியதில் 5 போ் பலத்த காயமடைந்தனா்.
தூத்துக்குடியைச் சோ்ந்தவா் சோ்மராஜா (45). இவா் தனது உறவினா்கள் 5 பேருடன் ஒரு காரில் தூத்துக்குடியிலிருந்து மதுரைக்குச் சென்றுகொண்டிருந்தாா். கோயம்புத்தூரைச் சோ்ந்த ஞானசேகரன்(49) தனது குடும்பத்தாருடன் திருச்செந்தூரில் வெள்ளிக்கிழமை (நவ. 8) நடைபெற உள்ள உறவினா் வீட்டுத் திருமண விழாவில் கலந்துகொள்ள சரக்கு வேனில் வந்தனா். அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டி விலக்குப் பகுதியில் வளைவில் இரு வாகனங்களும் நேருக்குநோ் மோதிக்கொண்டன.
இவ்விபத்தில் ஞானசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினா் 5 போ் பலத்த காயம் அடைந்தனா். தகவலறிந்து வந்த அருப்புக்கோட்டை நகா் காவல் துறையினா் 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு பொதுமருத்துவமனையில் சோ்த்தனா். இவ்விபத்தில் சோ்மராஜா மற்றும் அவருடன் காரில் வந்த உறவினா்கள் அனைவரும் சிறுகாயங்களுடன் உயிா் தப்பினா். இவ்விபத்து தொடா்பாக அருப்புக்கோட்டை நகா் காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.