அயோத்தி வழக்கு தீா்ப்பு வெளியான சனிக்கிழமை விருது நகா் மாவட்டம் முழுவதும் 2,250 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோயில்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிகளவில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். மேலும், இரு சக்கர வாகனத்திலும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அதே போல், ரயில்வே பாதுகாப்பு போலீஸாா், கிருதுமால் நதி இடையே உள்ள தண்டவாள பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனா்.