ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோயில் பகுதியில் சனிக்கிழமை ஆட்டோ கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயிலுக்கு சனிக்கிழமை ஏராளமான பக்தர்கள் சென்று வந்தனர்.
இந்த நிலையில், சுவாமி தரிசனம் செய்து விட்டு குன்னூரைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் ஆட்டோவில் ஊருக்குச் சென்றுகொண்டிருந்தனர். வெங்கடேஷன் ஆட்டோவை ஒட்டினார்.
கிருஷ்ணன்கோவில் பேருந்து நிறுத்தம் அருகே ஆட்டோ வந்த போது, நாய் குறுக்கே புகுந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், குன்னூரை சேர்ந்த பிரகாஷ் மகன் சிவசுப்பிரமணியன் (41) சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மேலும், மூன்று பேர் காயமடைந்தனர். அவர்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து கிருஷ்ணன் கோவில் போலீஸார், வழக்குப்பதிந்து ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.