விருதுநகர் அருகே சூலக்கரை பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இரு சக்கர வாகனத்தில் சென்று திங்கள்கிழமை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் வடக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியம் சார்பில் அக்கட்சியினர் தொகுதி முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையில் திங்கள்கிழமை நடைபெற்ற இரு சக்கர வாகனப் பிரசாரத்தை, அக்கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலர் ஆர். த்துவேலு தொடக்கி வைத்தார். அப்போது, அக்கட்சியைச் சேர்ந்த ஜெ.ஜே. சீனிவாசன், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு பேசினார். அதன்பின்னர், விருதுநகர் தெற்கு ஒன்றியம் பொம்மையாபுரம் முதல் மேல சின்னையாபுரம் வரை இரு சக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று வாக்கு சேகரித்தனர். மேலும், பொதுமக்களிடம் கை சின்னத்தில் வாக்களிக்கக் கோரி துண்டுப்பிரசுரம் வழங்கினர். வாக்கு சேகரிப்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.