விருதுநகர் அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில்  தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்

விருதுநகர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரப் பேருந்தை, மாவட்டத் தேர்தல்

விருதுநகர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரப் பேருந்தை, மாவட்டத் தேர்தல் அலுவலர் அ. சிவஞானம் பார்வையிட்டு  பொதுமக்களுக்கு திங்கள்கிழமை துண்டுப்பிரசுரம் வழங்கினார்.
இந்திய தேர்தல் ஆணையம், பொதுமக்கள் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்பதையும், 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மேலும், கடந்த தேர்தல்களில் வாக்குப் பதிவு குறைவாக உள்ள பகுதிகளைக் கண்டறிந்து, அப்பகுதிகளில் தனிக்கவனம் செலுத்தி, பொதுமக்களிடையே தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிக நடமாட்டமுள்ள பேருந்து நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் சம்பந்தமான விழிப்புணர்வு குறும்படங்கள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேருந்து மூலம் பிரசாரம் செய்யப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் வந்த இந்த விழிப்புணர்வு பிரசாரப் பேருந்தை, மாவட்டத் தேர்தல் அலுவலர் அ. சிவஞானம் பார்வையிட்டு, விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கோ. உதயகுமார், செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், அரசுப் போக்குவரத்துக் கழக விருதுநகர் கிளை வணிகத் துணை மேலாளர் கே. மாரிமுத்து உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com