ராஜபாளையத்தில் வாருகாலில் தேங்கிய கழிவுநீரால் சுகாதாரக்கேடு

ராஜபாளையத்தில் வாருகாலில் தேங்கிய கழிவு நீரால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ராஜபாளையத்தில் வாருகாலில் தேங்கிய கழிவு நீரால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ராஜபாளையம் தென்காசி ரோடு கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அங்கைய ராஜா தெருவில்  வாருகால்கள் சுத்தம் செய்யப்படாததால் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது.  இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு,  கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. இப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதனால் நகராட்சி நிர்வாகம் விரைந்து வாருகால் அடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com