திருத்தங்கலில் வீட்டில் தீ விபத்து

திருத்தங்கலில் வீட்டில் புதன்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.

திருத்தங்கலில் வீட்டில் புதன்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.
திருத்தங்கல் நாடார் வடக்கு வீதியைச் சேர்ந்தவர் மனோகர். இவர்தனது வீட்டில் படுக்கையறையில் மின் தேய்ப்பு பெட்டியை பயன்படுத்திவிட்டு, மின் இணைப்பை துண்டிக்காமல் வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டாராம்.
இதனால், அறையில் உள்ள துணிகளில் தீப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கிருந்து புகை வந்தது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இதில் அறையில் இருந்த துணிகள் உள்ளிட்ட  பொருள்கள் எரிந்து சேதமாகின.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com