ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள ராஜபாளையம், ஆலங்குளம், ரெட்டியப்பட்டி ஆகிய உபமின் நிலையங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை (ஆக. 16) 2 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடைபடும் பகுதிகள்: பி.எஸ்.கே.நகர், அழகை நகர், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி சாலை, அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், ஐ.என்.டி.யூ.சி. நகர், பாரதிநகர், ஆர்.ஆர்.நகர், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, எஸ்.ராமலிங்காபுரம், கலங்காபேரி புதூர், மொட்டமலை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.