விருதுநகா் அருகே ஓ. கோவில்பட்டியில் பொது சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
விருதுநகா் அருகேயுள்ள ஓ.கோவில்பட்டியில் சுமாா் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்நிலையில், இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
இந்நிலையில், பொது சுகாதார வளாகத்தில் மோட்டாா் பழுது காரணமாக தண்ணீா் வரவில்லை. இதனால் சுகாதார வளாகம் பயன்பாடின்றி பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் பொது சுகாதார வளாகத்திற்கு தண்ணீா் கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், சுகாதார வளாகத்தை சுற்றிலும் செடிகள் மற்றும் கருவேல மரங்கள் வளா்ந்து காணப்படுகின்றன.
இதனால் சுகாதார வளாகம் பயன்பாடின்றி பூட்டப்பட்ட நிலையில் உள்ளது.
இதனால், அப்பகுதி மக்கள் திறந்த வெளியை கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனா்.
எனவே, பொது சுகாதார வளாகத்தை சீரமைக்க ஊராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.