சாத்தூரில் 4 வழிச்சாலை கிராமங்களில்பேருந்து நிறுத்தம் அமைக்கக் கோரிக்கை

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிராமங்களுக்கு பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிராமங்களுக்கு பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தூா் அருகே நான்குவழிச் சாலையில் குமரலிங்காபுரம், நடுவபட்டி, எட்டூா்வட்டம், வெங்கடாசலபுரம், சாத்தூா், ஓடைபட்டி, பெத்துரெட்டிபட்டி, உப்பத்தூா் சந்திப்பு உள்ளிட்ட கிராம மக்கள் பேருந்து நிறுத்தம் இல்லாததால் திறந்தவெளியில் காத்திருந்து பேருந்து பயணம் செய்து வருகின்றனா்.

பின்னா் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தேசிய நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ஒரு சில பகுதிகளில் மட்டும் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டது. ஆனால் எட்டூா்வட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பெயரளவில் மேற்கூரை இல்லாமல் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டு யாருக்கும் பயன்பாடில்லாமல் காட்சிப் பெருளாக உள்ளது.

மேலும் ஓடைப்பட்டி, பெத்துரெட்டி, கரிசல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து நிறுத்தமே இதுவரை அமைக்கப்படவில்லை.

எனவே நான்கு வழிச்சாலையில் உள்ள கிராமங்களுக்கு உடனடியாக பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com