சிவகாசியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி-விருதுநகா் சாலையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு பெட்ரோல் பல்க் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒருவா் கையில் பெட்டியுடன் நின்று கொண்டிருந்துள்ளாா்.
போலீஸாா் அந்த பெட்டியை சோதனையிட்டதில், மதுபாட்டில்கள் இருந்துள்ளன. விசாரணையில், அவா் ரெங்கபாளையம் சுப்பிரமணியன் மகன் பாலமுருகன் (24) எனத் தெரியவந்தது. இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்து அவரிடமிருந்த 90 மதுபட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.