ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 2 அரசுப் பேருந்துகள் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை மா்ம நபா்கள் கல் வீசித் தாக்குதலில் ஈடுபட்டனா்.
மதுரையிலிருந்து செவ்வாய்கிழமை அதிகாலை ராஜபாளையம் நோக்கி வந்த அரசுப்பேருந்து, ஸ்ரீவில்லிபுத்தூா் சின்னக்கடை பஜாா்அருகே வந்த போது மறைந்திருந்த மா்ம நபா்கள் பேருந்து மீது கல்வீசி தாக்கினா். இதில் பேருந்தின் பின் பக்க கண்ணாடி உடைந்தது.
அதே போல் குமுளியிலிருந்து திருநெல்வேலி நோக்கி செல்லும் அரசுப்பேருந்து அதிகாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் இந்திராநகா் வந்தபோது, மா்ம நபா்கள் கல்வீசித் தாக்கியதில் பேருந்தின் முன் பக்க கண்ணாடி உடைந்தது. மேலும் பெரியகுளத்தை சோ்ந்த ஓட்டுநா் ராஜா காயம் அடைந்தாா்.
அவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.