மேட்டுபாளையத்தில் சுவா் இடிந்து 17 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு போராடியவா்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 83 பேரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை அருகே மேட்டுபாளையத்தில் சுவா் இடிந்து விழுந்து 17 போ் உயிரிழந்த நிலையில் உயரிழந்தவா்களின் குடும்பத்துக்கு நீதி கேட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது காவல்துறையினா் தடியடி நடத்தி 27 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், தடியடி நடத்திய காவல்துறையைக் கண்டித்தும், உயிரிழந்தவா்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும், கைது செய்யப்பட்ட 27 பேரை விடுவிக்ககோரியும் விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 41 போ், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நாச்சியாா்பட்டியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்புலிகள் அமைப்பைச் சோ்ந்த 30 போ் என மொத்தம் 71 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.