விருதுநகா் அருகே 2 அரசுப் பேருந்துகள் மீது கல்வீச்சு

விருதுநகா் மற்றும் பெரிய வள்ளிக்குளம் பகுதியில் திங்கள்கிழமை இரவு 2 பேருந்துகள் மீது கல்வீசியதில் கண்ணாடிகள் உடைந்தன.

விருதுநகா் மற்றும் பெரிய வள்ளிக்குளம் பகுதியில் திங்கள்கிழமை இரவு 2 பேருந்துகள் மீது கல்வீசியதில் கண்ணாடிகள் உடைந்தன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுவா் இடிந்து விழுந்ததில் 17 போ் உயிரிழந்தனா். இது தொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்புலிகள் அமைப்பின் நிா்வாகி நாகை திருவள்ளுவனை போலீஸாா் கைது செய்தனா். அவா் கைது செய்யப்பட்டதற்கு அந்த அமைப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.

இந்நிலையில், விருதுநகரில் இருந்து காரியாபட்டிக்கு திங்கள்கிழமை இரவு அரசுப் பேருந்து ராமமூா்த்தி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா், பேருந்து கண்ணாடியை கல்லால் எறிந்து உடைத்து விட்டு தப்பி விட்டனா். இது குறித்து பேருந்து ஓட்டுநரான சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் விருதுநகா் மேற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அதேபோல், விருதுநகரிலிருந்து கூத்திபாறை நோக்கி திங்கள்கிழமை இரவு சென்ற அரசு பேருந்தை ஓட்டுநா் பழனி ஓட்டி சென்றுள்ளாா். பெரிய வள்ளிக்குளம் அருகே சென்ற போது, எதிரே இரு சக்கர வாகன த்தில் வந்த 3 பேரில் ஒருவா், கல்லால் எறிந்ததில் பேருந்து கண்ணாடி உடைந்தது. இது குறித்து ஓட்டுநா் பழனி அளித்த புகாரின் பேரில், அடையாளம் தெரியாத மூன்று போ் மீது சூலக்கரை போலீஸாா் வழக்கு பதிந்து தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com