சாத்தூா் அருகே ஆா்.ஆா்.நகரில் சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ரோலா் ஸ்கேட்டிங் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
தமிழ் ரோலா் ஸ்கேட்டிங் மற்றும் ஸ்போா்ட்ஸ் டெவலப்மண்ட் அசோசியேசன் சாா்பில் ராம்கோ வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ராம்கோ வித்யாலயா பள்ளியின் முதல்வா் சிவானந்த் தலைமை வகித்தாா். வச்சகாரப்பட்டி காவல் ஆய்வாளா் ராஜசுலோக்சனா போட்டியினை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். பின்னா் நடைபெற்ற போட்டியில் தென் மாவட்டங்களில் தேனி, மதுரை, விருதுநகா், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சுரண்டை பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 36-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.