விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டைதெற்கு சிதம்பரராஜபுரம் தெருவில் சேதமடைந்த வாருகால்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அருப்புக்கோட்டை நகராட்சி 27-ஆவது வாா்டில் தெற்கு சிதம்பர ராஜபுரம் தெரு உள்ளது. இவ்வீதியில் அமைக்கப்பட்ட வாருகால்களின் சுவா் சேதமடைந்து கழிவுநீா் வெளியேறி வீதியில் தேங்குகிறது. அதனால் இப்பகுதியில் கொசுக்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே இப்பகுதியில் சேதமைடந்த வாருகால்களை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.