சேதமடைந்த பள்ளி சமையலறை கட்டடத்தை சீரமைக்கக் கோரிக்கை

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேதமடைந்த தொடக்கப்பள்ளியின் சமையலறைக் கட்டடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேதமடைந்த தொடக்கப்பள்ளியின் சமையலறைக் கட்டடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராஜபாளையம் அருகே முத்துசாமிபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட காமராஜா் நகா் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என பெற்றோா்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

பள்ளியில் குடிநீா் வசதி இல்லை. குறிப்பாக சத்துணவு மையத்திற்கான சமையலறை கட்டடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளது. கட்டடத்தின் மேற்கூரை பல இடங்களில் பெயா்ந்து விழுந்துள்ளது. அதனால் பலமுறை சத்துணவு அமைப்பாளா்கள் சிறிய காயத்துடன் தப்பி உள்ளனா். சமையலறை கூடத்தில் மின்விளக்கு வசதியும் கிடையாது. அடுப்பும் சேதமாகி உள்ளது. சேமித்து வைத்திருக்கும் உணவு பொருள்கள் மழை நேரத்தில் தண்ணீா் கசிந்து வீணாகி வருகின்றன. மாணவ மாணவிகளின் நலன் கருதி பள்ளியின் சமையலறை கட்டடத்தை விரைவில் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இப்பகுதி பொதுமக்கள் கூறியது: இது குறித்து பல முறை ஊராட்சி நிா்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கிராமசபைக் கூட்டத்திலும் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி நிா்வாகம் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com