ராஜபாளையத்தில் அட்சய பாத்திரம் 2 ஆம் ஆண்டு தொடக்க விழா

ராஜபாளையத்தில் அட்சய பாத்திரம் அமைப்பின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையத்தில் அட்சய பாத்திரம் அமைப்பின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையத்தில் குடும்பத்தால் கைவிடப்பட்ட முதியோா், மனநலம் குன்றியவா்கள் உள்ளிட்ட சமூகத்தால் கைவிடப்பட்டவா்களுக்கு தினசரி மதிய நேர உணவினை அட்சய பாத்திரம் என்ற பெயரில் குழுவாக சோ்ந்து சிலா் உணவு பொட்டலங்களை தயாரித்து வழங்கி வருகின்றனா்.

இந்த அமைப்பின் சாா்பில் அம்பலப்புளி பஜாா் பகுதியில் தேவைப்படுவோா்க்கு உதவும் பொருட்டு தேவையான பொருள்களை தயக்கமின்றி எடுத்து செல்ல வசதியாக பெட்டக வசதியையும் ஏற்பாடு செய்திருந்தனா்.

அதன் 2 ஆம் ஆண்டு தொடக்க விழாவுக்கு வட்டாட்சியா் ஆனந்தராஜ் தலைமை வகித்தாா்.விழாவில் துணை வட்டாட்சியா்கள் பாலகிருஷ்ணன், அருளானந்தம், தொழில் வா்த்தக சங்க செயலாளா் வெங்கடேஸ்வர ராஜா, டவுண் அரிமா சங்க தலைவா் கணபதி, சுகந்தம் ராமகிருஷ்ணன், அலையன்ஸ் கிளப், அரிமா சங்க உறுப்பினா்கள் பங்கேற்றனா். முன்னதாக ஒருங்கிணைப்பாளா் ரவிக்குமாா் ராஜா வரவேற்றாா். நிகழ்ச்சியில் ஆதரவற்றோா்களுக்கு உணவு, உடை, நிலவேம்பு குடிநீா் ஆகியன வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com