சக்திவிநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் சக்திவிநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் சக்திவிநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சாத்தூரில் உள்ள கே.கே.நகர், தில்லைநகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கே.கே.நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சக்திவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சனிக்கிழமை அதிகாலை முதல், திங்கள்கிழமை வரை பல்வேறு யாகபூஜைகள் நடத்தபட்டன .திங்கள்கிழமை காலை விநாயகருக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் மற்றும் அபிஷேகங்களும் நடைபெற்றன. பின்னர் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பின்னர் காப்புகட்டி விரதம் இருந்த பக்தர்களின் பால்குட ஊர்வலமும் நடைபெற்றது.  இதில் கே.கே.நகர்,தில்லைநகர்,வெங்கடாசலபுரம் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கபட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com