விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள வேளாண் பயிற்சி மையக் கட்டடத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர் அருகே சுப்பிரமணியாபுரம் கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில், வேளாண் பயிற்சி மையக் கட்டடம் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னாள் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. ஆனால் நாளடைவில் இதை பயன்படுத்தாமல் தற்போது காட்சிப் பொருளாக இக்கட்டடம் உள்ளது. இதை பயன்படுத்தாததால் இக் கட்டடம் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
மேலும் இக் கட்டடம் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளதால், இவ்வழியாகச் செல்ல பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் இதன் ஆபத்தை உணராமல் இப்பகுதியினர் சிலர் இதை ஆக்கிரமித்து விறகுகளை சேகரித்து இதன் அருகில் அடுக்கியுள்ளனர். மேலும் இங்கு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் இப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.
எனவே இந்த வேளாண் பயிற்சி மையக் கட்டடத்தை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.