சாத்தூர் அருகே வாருகாலில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது பழைய ஏழாயிரம்பண்ணை. இப்பகுதியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே செல்லும் கழிவுநீர் வாருகாலை ஊராட்சி நிர்வாகம் முறையாக சுத்தம் செய்யாமல் உள்ளது.
மேலும் இந்த பகுதியில் உள்ள குப்பைகள் அனைத்தும் வாருகால் பகுதியில் விழுந்துள்ளதால் கழிவு நீர் தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதோடு, கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்த காளிராஜன் கூறுகையில்:
பழைய ஏழாயிரம்பண்ணை பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எவ்வித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை. மேலும் குடிநீர் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் வாருகால்
பகுதியில் தேங்கி நிற்கும் குப்பைகளை அப்புறப்படுத்தி, இப்பகுதியில் குப்பைத் தொட்டிகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.