திருத்தங்கல் அருகே மனைவியை தாக்கிய கணவனை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
திருத்தங்கல் அருகே கங்காகுளத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன்.இவரது மனைவி கலைச்செல்வி (34). நாள்தோறும் மது அருந்திவிட்டு ஜெகதீஸ்வரன், கலைசெல்வியுடன் தகராறு செய்வாராம்.
இந்நிலையில் வியாழக்கிழமை மது அருந்திவிட்டு வந்த ஜெகதீஸ்வரன், கலைச்செல்வியை தாக்கினார். இதில் காயமடைந்த அவர் திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஜெகதீஸ்வரனை கைது செய்தனர்.