ராஜபாளையத்தில் மரம் நடுதல், ரத்த தானம் மற்றும் உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வு குறுநடை மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம், மாயூரநாதர் சுவாமி கோயில் திடலில் இப் போட்டியினை வைமா பள்ளிகளின் முதல்வர் திருப்பதி செல்வன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பழனிகுமார் ஆகியோர் தொடக்கி வைத்தனர். சிறு குழந்தைகள் முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழரின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் மல்லர் கம்பம் விளையாட்டினை மாணவர்கள் செய்து காண்பித்தனர்.