சிவகாசியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சிவகாசியில் புதன்கிழமை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவகாசியில் புதன்கிழமை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை விவசாயிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள கடன்களையும், விவசாய குடும்பத்தில் உள்ள கல்விக் கடனையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு தரமான விதைகளை அரசு வேளாண் பல்கலைக் கழகத்திலிருந்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.
சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அந்த அமைப்பின் மாநிலத்தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தலைமை வகித்தார். இதில் மாவட்டத் தலைவர் ஜி.செல்வராஜ், செயலர் ஏ.சங்கையா, மாவட்ட அவைத் தலைவர் ஆர்.ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com