சாரணர்கள் பயிற்சி முகாம்

ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்ட அளவிலான பாரத சாரண, சாரணியர் இயக்க மாணவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்


ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்ட அளவிலான பாரத சாரண, சாரணியர் இயக்க மாணவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இங்குள்ள மகரிஷி வித்யாமந்திர் சி.பி.எஸ்.இ. உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமுக்கு பள்ளியின் செயலாளர் கே.குருவலிங்கம் தலைமை வகித்தார். சாரண இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.ராமசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். 
இதில், 18 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 268 சாரணர்களும், 87 சாரணியர்களும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. முன்னதாக முதல்வர் என்.கமலா வரவேற்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com