திருத்தங்கலில் திங்கள்கிழமை தேநீர் கடைக்காரரிடம் வழிப்பறி செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
திருத்தங்கல் மேலத்தெருவைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன் (30). இவர் அப்பகுதியில் தேநீர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் கடையிருந்து வீட்டிற்கு சென்றபோது, மர்ம நபர் ஒருவர் வழிமறித்து கத்தியைக் காட்டி, அவர் பையில் வைத்திருந்த ரூ.600-ஐ பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றார்.
அப்போது, அக்கம்பக்கம் உள்ளவர்களின் உதவியோடு, அந்த நபரை பிடித்து மாரீஸ்வரன் போலீஸாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில் அந்த நபர் திருத்தங்கல் செம்பட்டையன் என்ற ஜெகதீஸ்வரன் (24) எனத் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஜெகதீஸ்வரனை கைது செய்தனர்.