ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டத்திற்கான பயிற்சி வகுப்பு ஊரணி பட்டி நகராட்சி பள்ளி மற்றும் கிருஷ்ணன்கோவில் அரசு தொடக்கப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கான, இந்த பயிற்சி பயிற்சி வகுப்பினை வட்டார வள மைய மேற்பார்வையாளர் மாடசாமி தொடங்கி வைத்தார்.
இதில், தொடக்க நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு, நிகழாண்டில் 2, 3, 4, 5 ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், பாடத்திட்டம் சார்ந்த கருத்துக்கள், சந்தேகங்கள் ஆசிரியர்களுக்கு விளக்கி பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் 396 ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.