குற்றால சீசனுக்காக அந்தியோதயா விரைவு ரயிலை இயக்க வலியுறுத்தல்

குற்றால சீசனுக்காக தாம்பரம்-செங்கோட்டை அந்தியோதயா விரைவு ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


குற்றால சீசனுக்காக தாம்பரம்-செங்கோட்டை அந்தியோதயா விரைவு ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குறைந்த கட்டணத்தில் முன்பதிவில்லாத இந்த ரயில் தாம்பரம்-செங்கோட்டை வரை இருமார்க்கத்திலும் பகல் நேரத்தில் இயக்கப்படும் என கடந்த ஓராண்டுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இதுவரை இந்த ரயில் இயக்கப்படவில்லை.
தற்போது குற்றால சீசன் தொடங்கி விட்டதால், அந்தியோதயா விரைவு ரயிலை இயக்கினால் வசதியாக இருக்கும் என பொதுமக்கள் ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரயில்வே நிர்வாகம் இந்த ரயிலை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com