சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்கம், அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரி ஆகியன இணைந்து சனிக்கிழமை மாலை, கல்லூரியில் கண் தான விழிப்புணர்வு முகாமினை நடத்தின. நிகழ்ச்சிக்கு முதல்வர் பிரேமலதா தலைமை வகித்தார். அரிமா சங்க பட்டையத் தலைவரும் , கண் தான விருதுநகர் மாவட்டத் தலைவருமான ஜெ.கணேஷ் பேசினார். கண்தானம் குறித்த கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. துணை பேராசிரியர் ராஜாத்தி நன்றி கூறினார்.